2002-ம் ஆண்டு வெளியான ‘காதல் வைரஸ்’ படத்தை தயாரித்து இயக்கியிருந்தார் கதிர். இந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. தற்போது மீண்டும் தமிழில் புதிய படமொன்றை இயக்கவுள்ளார் கதிர்.

இந்தப் படத்தின் நாயகனாக புதுமுகம் கிஷோர் நடிக்கவுள்ளார். ஆர்.கே இண்டர்நேஷனல் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளது.

இந்தப் படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். விரைவில் பாடல்கள் பதிவுப் பணிகள் தொடங்கவுள்ளன.

‘உழவன்’, ‘காதல் தேசம்’, ‘காதலர் தினம்’, ‘காதல் வைரஸ்’ உள்ளிட்ட வரவேற்பு பெற்ற படங்களை இயக்கியவர் கதிர்.

 

[youtube-feed feed=1]