ஜம்மு,

காஷ்மீர் பிரிவினை வாத தலைவர் கிலானி கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர்களில் ஒருவரான சையது அலி ஷா கிலானிக்கு  திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அவர் உடல் பாதிக்கப்பட்டது. உடனடியாக அவர்  ஸ்ரீநகரில் உள்ள அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது..

திக்ரிக் இ ஹூரியத் என்ற  கட்சியின் தலைவராக இருப்பவர் கிலானி ( வயது 87). இவருக்கு நேற்று இரவு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது அவருக்கு பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாவும். உடல்நிலை சீராக இருப்பதாகவும் கட்சியின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

மேலும் சோதனை முடிந்த பின்னர் வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கிறது.