ஸ்ரீநகர்

காஷ்மீர் மாநில புதிய துணை முதல்வர் கத்துவா பலாத்காரம்  ஒரு சாதாரண நிகழ்வு என பதவி ஏற்ற அன்றே தெரிவித்தது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.   இந்த சம்பவம் நாட்டு மக்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.    அதை ஒட்டி பலாத்கார குற்றங்களுக்கு மரண தண்டனை என்னும் அவசரச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்து அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார்.

காஷ்மீரில் துணை முதல்வர் நிர்மல் சிங் மற்றும் இரு பாஜக அமைச்சர்கள் பதவி விலகினார்கள்.   புதிய துணை முதல்வராக கவிந்தர் குப்த பதவி ஏற்றுள்ளார்.   அவர் பதவி ஏற்ற உடன் பத்திரிகையாளரை சந்தித்தார்.

அந்த சந்திப்பில் ”கத்துவா பலாத்கார நிகழ்வு ஒரு சாதாரண சம்பவம் தான்.  அது தேவை இல்லாமல் பெரிதாக்கப்பட்டு நாட்டை பரபரப்பு ஆக்கி விட்டது.   இது போன்ற ஒரு மிகச் சாதாரண நிகழ்வுக்காக மாநில அமைச்சர்கள் பதவி விலகியது தேவையில்லாத செயல்” எனக் கூறினார்.

அவரது இந்த பேச்சு மிகவும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.