ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் நாளை (டிச., 30ஆம் தேதி)  நடைபெறவுள்ள காசி தமிழ் சங்கமத்தின் நிறைவு விழாவில் துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்கிறார். இதையொட்டி, அங்கு இரண்டு நாட்கள் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த  ​நிகழ்​வில், குடியரசு துணைத் தலை​வர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன், தமிழக ஆளுநர் ஆர்​.என் ரவி, மத்​திய கல்​வித் துறை அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான், மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் உள்​ளிட்​டோர் கலந்​து​கொள்ள உள்​ளனர்.
நடப்பாண்டு காசி தமிழ் சங்கமும்,  உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் டிச., 2 முதல் 15 வரை நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் தமிழக மாணவர்கள், கலைஞர்கள், விவசாயிகள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில், நிறைவு விழா ராமேஸ்வரத்தில் டிச., 30ஆம் தேதி மதியம் 3 மணியளவில் நடைபெற உள்ளது. இதில்  குடியரசுத் துணைத் தலை​வர் சி.பி ராதாகிருஷ்ணன், ஆளுநர் ஆர்​.என். ரவி  மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். காசி தமிழ்ச் சங்​கமம் நிறைவு விழா​வில் 5 ஆயிரம் பேர் கலந்​து​கொள்ள உள்​ளனர். இதையொட்​டி, 700 போலீ​ஸார் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​படுத்​தப்பட உள்​ளனர்.

இந்த விழாவானது,  நாளை (செவ்​வாய்​கிழமை) ராமேசுவரம் பேருந்து நிலை​யம் அரு​கே​யுள்ள ஆலய விடுதி வளாகத்​தில் நடை​பெற உள்​ளது. இதையொட்டி,  ஆலய விடுதி வளாகத்தில் ஆய்வு மேற்கொண்ட ராமநாதபுரம் ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், எஸ்.பி. சந்தீஷ் மற்றும் அதிகாரிகள . ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் ,  குடியரசுத் துணைத் தலை​வர் சாலை மார்க்​க​மாக வரும்​போது மதுரை- ராமேசுவரம் தேசிய நெடுஞ்​சாலை​யில், மண்​டபம் ஹெலிபேட்​டிலிருந்து ராமேசுவரம் வரையி​லான போக்​கு​வரத்து நிறுத்​தப்​பட்டு குடியரசுத் துணைத் தலை​வர் நிகழ்ச்​சிக்​கான மேடையை வந்​தடைந்​ததும் மீண்​டும் போக்​கு​வரத்து தொடங்​கப்​படும்.

விழா முடிந்தும்,  மீண்​டும் அவர் புறப்​பட்​டுச் செல்​லும்​போது போக்​கு​வரத்து நிறுத்​தப்​படும் என்​ப​தால், பொது​மக்​கள் தங்​களது பயணங்​களை அதற்​கேற்ப திட்​ட​மிட்​டுக் கொள்ள வேண்​டும்.

குடியரசுத் துணைத் தலை​வர் வரு​கை​யையொட்டி பாம்​பன், மண்​டபம், தங்​கச்​சிமடம், ராமேசுவரம் உள்​ளிட்ட பகு​தி​களில் 29, 30-ம் தேதி​களில் (இன்​றும் நாளை​யும்) ட்ரோன்​கள் பறக்​கத் தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது. தடையை மீறி ட்ரோன்​கள் பறக்க விடு​வோர் மீது வழக்​குப் பதிவு செய்​து, ட்ரோன்​கள் பறி​முதல் செய்​யப்​படும் என்றும் கூறினார்.

[youtube-feed feed=1]