மதுரை: கந்தன் மலையான திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. இதற்கு அறநிலையத்துறை அனுமதி மறுத்த நிலையில், அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

மதுரை மாவட்டம், எழுமலையை சேர்ந்த ராம.ரவிக்குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் தீபம் ஏற்றாமல், பிள்ளையார் கோயிலில் உள்ள தீப மண்டபத்தில் தீபத்தை ஏற்ற முடிவு செய்துள்ளனர். இந்த உத்தரவை ரத்து செய்து, மீண்டும் தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கியதுடன், அதற்கான முழு பாதுகாப்பையும் காவல்துறை வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கோவில் நிர்வாகம் சார்பில், “திருக்கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு அழைப்பிதழ்கள் அடிக்கப்பட்டு அனைவருக்கும் கொடுக்கப்பட்டு விட்டது. எனவே, இந்த ஆண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது” என வாதிடப்பட்டது.

இதனையடுத்து மனுதாரர் தரப்பில், “எந்தவிதமான பிரச்சினையும் இல்லாமல் கோயில் நிர்வாகம் கடந்த பல ஆண்டுகளாக, மோட்ச தீபம் ஏற்றக்கூடிய இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றி வருகின்றனர். மோட்ச தீபத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவது ஆகம விதிகளுக்கு எதிரானது” என தெரிவிக்கப்பட்டது.

பின்னர், தர்கா நிர்வாகம் சார்பில், “இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. உரிமையியல் வழக்காகத்தான் தாக்கல் செய்ய வேண்டும்” என வாதம் செய்யப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கை ஒத்தி வைத்தார். தொடர்ந்து, அரசு மற்றும் தர்கா நிர்வாக வாதங்களின் அடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருப்பரங்குன்றம் மலைக்குச் சென்று பார்வையிட்டார்.

இந்த நிலையில், இந்த வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நேற்று (டிச.1) உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், “திருக்கார்த்திகை தீபத் திருவிழா நாளில் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றலாம். தீபம் ஏற்றுவதற்கான முழு பாதுகாப்பையும் காவல்துறை வழங்க வேண்டும்” என உத்தரவிட்டார்.

இதையடுத்து, திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டு, கோவில் மணி அடித்தவுடன் மலை உச்சியில் உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு பூஜைகள் முடிந்து கார்த்திகை தீபம் ஏற்றப்படும்.

NO சிக்கந்தர் மலை: திருப்பரங்குன்றம் மலை என்றே அழைக்கப்பட வேண்டும் – ஆடு, கோழி பலியிட தடை! உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு