பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது போல, முன்களப் பணியாளர்கள்  நாடகமாடும் வீடியோ வைரலாகி வருகிறது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த 16ந்தேதி தொடங்கப்பட்ட நிலையில், கடந்த 5 நாளில், அதிகபட்சமாக தடுப்பூசி போடப்பட்டுள்ள மாநிலமாக கர்நாடக மாநிலம் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் உள்ள தடுப்பூசி மையம் ஒன்றில், மருத்துவர்கள் உள்பட சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவது போல ஊசியை வைத்துக்கொண்டு, மருந்து செலுத்தாமல், ஊசி போடப்பட்டுவிட்டதுபோல காட்டப்படும் காட்சி தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.