சென்னை

ன்று  சென்னையில் அமைச்சர் உதயநிதியை கர்நாடக துணை முதல்வர் டி கே சிவகுமார் சந்தித்துள்ளார்.

கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தற்போது சென்னை வந்துள்ளார்.  இவர் சேத்துப்பட்டில் இயற்கை எரிவாயு உற்பத்தி மையத்தை பார்வையிட்டு, செயல்பாடுகளை கேட்டறிந்தார்.

மேலும் திடக்கழிவு மேலாண்மை குறித்தும் ஆய்வு செய்த, பெங்களூருவில் திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்,

அப்போது அவர்

“மேகதாது அணை தமிழ்நாட்டுக்காக தான். மேகதாதுவில் அணை கட்டினால் கர்நாடகாவை விட அதிக பயன்பெறுவது தமிழ்நாடு தான். தற்போது போதிய அளவு மழை பெய்துள்ளதால் மேகதாது அணை குறித்து பேச வேண்டிய அவசியம் இல்லை. இரண்டு மாநிலத்திற்கும் வருண பகவான் உதவுவார்”

என்று தெரிவித்திருந்தார்.

பிறகு கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார். தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அவரது அலுவலகத்தில் இன்று சந்தித்தார். இவ்விரு மாநில அமைச்சர்களுக்கு இடையே நடந்த இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று தகவல் வெளியாகி உள்ளது.