பெங்களூரு: கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மறைவு செய்தால் அதிர்ச்சி அடைந்த அவரது ரசிகர்கள் 2 பேர் மாரடைப்பால் உயிரிழந்து உள்ள நிலையில், மேலும் ஒரு ரசிகர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மறைந்த கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் இளையமகன் புனித் ராஜ்குமார். இவர் கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். 46 வயதே ஆன அவர் நேற்று உடற்பயிற்சி செய்யும் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப் பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி  மரணமடைந்தார்.

புனித் ராஜ்குமாரின் திடீர் மறைவு இந்திய திரையுலகத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், கன்னட திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்பட திரையுலகைச் சேர்ந்தவர்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை  இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

புனித் ராஜ்குமார் மறைவையொட்டி கர்நாடக மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதுடன் அவரது உடல் அரசு மரியாதை யுடன் நல்லடக்கம் செய்யப்படும் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். மேலும் ரசிகர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த 144 தடை உத்தரவும்  பிறப்பிக்கப்பட்டுள்ளது.  புனித் ராஜ்குமார் உடலுக்கு ஆயிரக்கணக்கானோர் சாரை சாரையாக வந்துஅஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் புனித் ராஜ்குமார் மறைவு குறித்து செய்தி அறிந்ததும்,  அதிர்ச்சியைத் தாங்க முடியாமல் மாரடைப்பு ஏற்பட்டு அவரது ரசிகர்கள் முனியப்பன், பரசுராம்  இருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர்.

மேலும், பெல்காம் பகுதியில்  ராகுல்(21) என்ற ரசிகர் தூக்கிட்டு தற்கொலை நடிகர் புனித் ராஜ்குமார் மறைந்த அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு ரசிகர்கள் ஆகியோர் உயிரிழந்துள்ளார்.