கணினிப் பூக்கள்

கவிதைத் தொகுப்பு – பகுதி 18

பா. தேவிமயில் குமார்

மகுடம்

நிலவின் மகுடம்
சிதறி விழுந்ததா?
இவ்வளவு வைரங்கள்
வானில்???

திருமதியானாலும்
தந்தையின்
முதல் எழுத்தை என்
பெயரில் தாங்கி இருப்பதே …..என்
மிகப்பெரிய மகுடம்

வெயிலில் / மழையில் செல்கையில்
என் அம்மாவின்
சேலைத் தலைப்பே
என் மகுடம்

பெயர் மட்டும் தான்
இல்லத்தரசி…..
மகுடம் என்னவோ
கணவன் கையில் தான்…..