சென்னை

மோடி சீன எல்லைப் பிரச்சினை குறித்து ஏதும் சொல்லாமல் உள்ளதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

நீண்ட காலத்துக்கு முன்பிருந்தே இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேச மாநிலம் தங்களுக்கு சொந்தம் என சீனா உரிமை கொண்டாடி வருகிறது. தற்போ து அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 30 இடங்களுக்கு பெயர்களை மாற்றி 4 அவது பட்டியலை சீனா வெளியிட்டுள்ளது.

இவ்வாறு அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இடங்களின் பெயரை மாற்றும் சீனாவின் இத்தகைய நடவடிக்கைக்கு இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. அருணாச்சல பிரதேச மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று கூறி சீனாவின் செயல்களை நிராகரித்துள்ளது.

தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எக்ஸ் தளப்பதிவில் ,

”அருணாச்சல பிரதேசத்தின் பெயரை மாற்றும் அளவிற்கு நம் நாட்டிற்குள் சீனாவை ஊடுருவ, ஒன்றிய பாஜக அரசு அனுமதித்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. தங்களின் ஆதாயத்திற்காக, நாட்டின் பாதுகாப்பை அடைமானம் வைத்துவிட்டதா பா.ஜ.க.?. தமிழ்நாட்டில் வாக்குக்காக அவதூறுகளைப் பரப்பும் பிரதமர் மோடி, சீன எல்லைப் பிரச்சினை குறித்து எப்போது வாய்திறப்பார்?. 

என்று வினா எழுப்பியுள்ளார்.