சென்னை

கனிமொழி திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி அபார வெற்றிபெற்றது.  இதில் கனிமொழி தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக முதல்ச்ரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பில் முதல்வர் முக ஸ்டாலின்,

”தி.மு.க. நாடாளுமன்ற குழு (மக்களவை, மாநிலங்களவை) தலைவராக கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளார்.

மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு நியமிக்கப்பட்டுள்ளார்.

மக்களவை குழு துணைத் தலைவராக தயாநிதிமாறன் நியமிக்கப்பட்டுள்ளார்.

 மக்களவை கொறடாவாக ஆ.ராசா நியமிக்கப்பட்டுள்ளார்.

மாநிலங்களவை குழு தலைவராக திருச்சி சிவா நியமிக்கப்பட்டுள்ளார்.

மாநிலங்களவை குழு துணைத் தலைவராக சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார்.

மாநிலங்களவை கொறடாவாக வில்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தி.மு.க. நாடாளுமன்ற பொருளாளராக ஜெகத்ரட்சகன் நியமிக்கப்பட்டுள்ளார்”

என்று தெரிவித்துள்ளார்.