Skip to content

today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்

தமிழ் செய்தி இணையதளம்

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
  • Youtube
இந்தியா சினி பிட்ஸ்

வீடு இடிப்பு: உத்தவ்தாக்கரே அரசு மீது ரூ.2கோடி நஷ்டஈடு கேட்டு கங்கனா வழக்கு!

Sep 16, 2020

மும்பை: வீதி மீறியதாக கூறி, தனது பங்களாவை அவசரம் அவசரமாக இடித்ததற்கு ரூ.2 கோடி இழப்பீடு  வழங்க வேண்டும் என வலியுறுத்தி, நடிகை கங்கனா, மகாராஷ்டிரா மாநில அரசு மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

முப்பை திரையுலகில் நிகழும் போதைப்பொருள் குறித்து, நடிகை கங்கனா கருத்து தெரிவித்ததால், ஆளும் சிவசேனா அரசுக்கும், கங்கனாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், கங்கனாவுக்கு சிவசேனா மிரட்டல் விடுத்து. அவர் மும்பை வர முடியாது என்று மிரட்டப்பட்ட நிலையில், அவருக்கு மத்தியஅரசு இசட்பிளஸ் பாதுகாப்பு வழங்கியது.  அதனால் அவர் மும்பை வந்து சென்றார்.

இதற்கிடையில், மும்பையில் உள்ள அவரது வீடு, ஏற்கனவே வாங்கப்பட்ட அனுமதியை மீறி படிக்கட்டுக்கு கீழே கழிவறை அமைத்துள்ளதாகவும், வீட்டை அலுவலகமாக மாற்றி இருப்பதாகவும், வீட்டின்  ஒருபகுதியை மும்பை மாநகராட்சி நிர்வாகம் குற்றம் சாட்டியது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கங்கனா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், வழக்கு விசாரணைக்கு வருவதற்குள், கடந்த 9-ந்தேதி கங்கனாவின் வீட்டின் ஒரு பகுதியை மாநில அரசு இடித்தது. இது கடுமையான விமர்சனத்தை எழுப்பியது.

இது தொடர்பாக மாநில கவர்னரை சந்தித்து புகார் கொடுத்த கங்கனா, மும்பை உயர்நீதி மன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளார். ஏற்கனவே தொடரப்பட்டுள்ள வழக்கில், கங்கனாவின் வீட்டை இடிக்க  நீதிபதி கதாவல்லா தலைமையிலான அமர்வு இடைக்கால தடை விதித்தது.

இந்த நிலையில், தற்போது, அந்த மனுவில், கங்கனா நேற்று திருத்தம் செய்து, நஷ்டஈடு கேட்டு மனுவை சமர்ப்பித்துள்ளார். அதில்,  பொதுமக்களை பாதிக்கும் சில விஷயங்களை கையாள்வது தொடர்பாக, சமீபத்தில் நான் தெரிவித்த கருத்துகளால், மராட்டிய மாநில அரசுடன் மோதல் ஏற்பட்டது. குறிப்பாக, அரசில் அங்கம் வகிக்கும் ஒரு அரசியல் கட்சியில் இருப்பவர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டது. அதன் விளைவாக, அந்த கட்சி ஆளுங்கட்சியாக உள்ள மும்பை மாநகராட்சி, என் பங்களாவை இடித்தது.
பங்களாவை பழுதுபார்க்க நான் 2018-ம் ஆண்டு அனுமதி பெற்றிருந்தேன். ஆனால், கடந்த 7-ந்தேதி மாநகராட்சி திடீரென நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு பதில் அளிக்க வெறும் 24 மணி நேரமே அவகாசம் அளிக்கப்பட்டது. அதற்குள் நான் பதில் அளித்தபோதிலும், அவசரகதியில் நிராகரிக்கப்பட்டது.

மறுநாளே மாநகராட்சி மற்றும் போலீஸ் அதிகாரிகள் பங்களாவை இடித்தனர். அவர்கள் ஏற்கனவே அங்குதான் முகாமிட்டு இருந்தனர். எனவே, பங்களாவை இடிக்க வேண்டும் என்ற உள்நோக்கம் மாநகராட்சியிடம் இருந்துள்ளது. அதன் செயலை ‘சட்ட விரோதம்’ என்று அறிவிக்க வேண்டும்.

மாநகராட்சி மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எனக்கு ரூ.2 கோடி இழப்பீடு அளிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த வழக்கு வரும்  22-ந்தேதி விசாரணைக்கு வருகிறது.

Patrikai.com official YouTube Channel
YouTube Video VVVXVTV4RTg2Vm5pVjhlWjZtS2NlLVR3LkJGbVBrVENDNFdR எடப்பாடி கூட்டத்தை சேர்க்கிறாரு..  OPS,KAS க்கு தானா வருதா?  நெசவாளன் அரசன்

#sengottaiyan #admk #edapadipalaniswamy #tnelection2026 #tamilnadupolitics #patrikaidotcom #dmk #vijay #tamilnadupoliticalnews #kasengottaiyan #kas #ops #eps #tvk #tvkvijay #bjp  #admkalliance #ssarasan #gobichettipalayam #dindukal
எடப்பாடி கூட்டத்தை சேர்க்கிறாரு..  OPS,KAS க்கு தானா வருதா?  நெசவாளன் அரசன்

#sengottaiyan #admk #edapadipalaniswamy #tnelection2026 #tamilnadupolitics #patrikaidotcom #dmk #vijay #tamilnadupoliticalnews #kasengottaiyan #kas #ops #eps #tvk #tvkvijay #bjp  #admkalliance #ssarasan #gobichettipalayam #dindukal
எடப்பாடி கூட்டத்தை சேர்க்கிறாரு.. OPS,KAS க்கு தானா வருதா?  நெசவாளன் அரசன் #sengottaiyan
கதிர்காமம் கந்தப்பெருமானே.. உமா பாலசுப்பிரமணியம் 

#thiruppugazh  #aarupadai​ #murugantemple​ #murugan​ #srilankatemples ​  #temples​ #sivaperuman​ #ilakkiyam​ #tamilgod​ #bhakti​ #sivalayam​ #bhaktisongs​ #palani​ #senthilnathan​ #tiruchendur​ #vetrivel​ #kavadi​ #omsaravanabhava​  #tamilnadu​ #pazhamudhircholai​ #thirupugal​ #tiruchendurmurugan​ #patrikaidotcom #aarupadaiveedu #vaitheeswarankovil #thirupparankundram #pazhamudhircholai #kadamba #walajabad #oothukadu
கதிர்காமம் கந்தப்பெருமானே.. உமா பாலசுப்பிரமணியம் #thiruppugazh
சாய்பாபாவை சரண் அடைந்தால் ஏற்படும் அதிசயங்கள்? குறளார் கோபிநாதன்

#saibaba #saibabablessings #patrikaidotcom #saibabamiracles #jaisaibaba #divotional #omsairam #omsai #omsaibaba #saiaashirwad #shiradi #shridisaibaba
சாய்பாபாவை சரண் அடைந்தால் ஏற்படும் அதிசயங்கள்? குறளார் கோபிநாதன் #saibaba #saibabablessings
Load More... Subscribe

Post navigation

கொரோனா – இந்தியாவில் தொற்றியோர் எண்ணிக்கை 50 லட்சத்தைக் கடந்தது!
வெளியானது அக்ஷரா ஹாசனின் ‘அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் …..!

Related Post

இந்தியா

இண்டிகோ ஏர்லைன்ஸ் வீழ்ச்சிக்கு பாஜக அரசின் அதிகாரமே காரணம்! ராகுல்காந்தி டிவிட்

இந்தியா

550 விமானங்கள் ரத்து… இண்டிகோ விமான நிறுவனம் தத்தளிக்கக் காரணமென்ன ?

இந்தியா வர்த்தக செய்திகள்

ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைப்பு! ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா

உலகம்

இந்தியா உலகம்

இரண்டுநாள் அரசுமுறைப் பயணமாக இன்று மாலை இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்!

December 4, 2025 A.T.S Pandian
உலகம்

19 நாடுகளைச் சேர்ந்தவர்களின் விசா விண்ணப்பங்கள் தற்காலிக நிறுத்தம்… அமெரிக்கா அறிவிப்பு

December 3, 2025 Sundar
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உலகம்

புவி காந்த புயல் : இரு தினங்களுக்கு முன் ஏற்பட்ட சக்திவாய்ந்த சூரிய வெடிப்பு காரணமாக நாசா எச்சரிக்கை

December 3, 2025 Sundar
உலகம்

2 வாரத்தில் 1000 பேர் வரை பலி… தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மழையின் கோரத்தாண்டவம்…

December 1, 2025 Sundar
உலகம்

சிறுவர்களின் ஆபாச வீடியோ தொடர்பாக சிட்னியைச் சேர்ந்த 4 பேரை ஆஸ்திரேலிய போலீசார் கைது செய்துள்ளனர்.

December 1, 2025 Sundar

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer