சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு விவகாரம் குறித்து சிபிஐ-க்கு மாற்றகோரிய வழக்குகள் ஜூலை 3ந்தேதிக்கு சென்னைஉயர்நீதி மன்றம் ஒத்திவைத்துள்ளத.

நாடு முழுவதும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்திய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி அதிமுக, பாமக, சமூக நீதிக்கான வழக்கறிஞர் பேரவை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகளை தொடர்ந்துள்ளத. இந்த வழக்கை இன்று விசாரணைக்கு வந்த நிலையில்,  அரசுத்தரப்பு கோரிக்கையை ஏற்று,  வழக்கை ஜூலை 3ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்து உத்தரவிட்டது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்றக் கோரி, அதிமுக வழக்கறிஞர்கள் அணி மாநிலச் செயலாளர் இன்பதுரை மற்றும் பாமக செய்தித் தொடர்பாளரும், சமூக நீதிப்பேரவை தலைவருமான வழக்கறிஞர் பாலு ஆகியோர் தாக்கல் செய்திருந்த வழக்குகள், சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் இன்று (ஜூன் 26) மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது, தமிழக அரசுத்தரப்பில் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், அரசின் அறிக்கை தயாராக உள்ளது. அதை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்கவேண்டும். அதனால், வழக்கின் விசாரணையை 10 நாட்களுக்கு தள்ளிவைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். ஆனால், வழக்கில் உடனடியாக புலன் விசாரணையை நடத்த வேண்டும். புலன் விசாரணையை உரிய நேரத்தில் துவங்காவிட்டால் ஆதாரங்கள் அழிந்து விசாரணையில் பாதிப்பு ஏற்படும். விசாரணை வீணாகி விடும் என பாலு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், ‘ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மெத்தனால் எங்கிருந்து வந்தது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது’ என்றார். தொடர்ந்து அதிமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி, ஒவ்வொரு ஆண்டும் கள்ளச்சாராய மரண சம்பவங்கள் அரங்கேறுகின்றன.

இதுசம்பந்தமான வழக்குகளில் தாமதமான விசாரணை காரணமாக, குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டு விடுகின்றனர். அதனால், விரைந்து விசாரணை நடத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து, வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்ற அரசின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், விசாரணையை ஜூலை 3 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில்  விசாரிக்கப்பட்டு வருகிறது. நேற்றைய விசாரணையின்போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “ஏற்கெனவே இதே கோரிக்கையை வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அறிக்கை தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த அறிக்கை தயாராக உள்ளது. அந்த வழக்கு நாளை (இன்று) விசாரணைக்கு வரவுள்ளது” என்றார்.

இதையடுத்து  மனுதாரரான வழக்கறிஞர் கே.பாலு ஆஜராகி, “கள்ளக் குறிச்சியில் நீதிமன்றம் அமைந்திருக்கும் பகுதியிலேயே கள்ளச் சாராயம் விற்கப்பட்டு வருகிறது. முதலில் விஷம் கலந்த சாராயம்குடித்தவர்கள் இறந்த நிலையில், மாவட்ட ஆட்சியரின் தவறான அறிவிப்பால், கூடுதல் உயிரிழப்புகள் நேரிட்டுள்ளன. இதில் காவல் துறை உயர் அதிகாரி களுக்கும் தொடர்பு உள்ளது” என்றார்.

அதையடுத்து நீதிபதிகள், “இதுதொடர்பாக அதிமுக தொடர்ந்துள்ள வழக்குடன், இந்த வழக்கும் சேர்த்து நாளை (இன்று) விசாரிக்கப்படும்” என்று என கூறினர். அதையடுத்து இன்று விசாரணைக்கு வந்த நிலையில்,  அரசின் கோரிக்கையை ஏற்று ஜூலை 3ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.