தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகைகளில் ஒருவர் நடிகை ஜோதிகா. தன் அழகான சிரிப்பாலும் சிறந்த நடிப்பாலும் தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே கொண்டுள்ள நடிகை ஜோதிகா நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொண்டார்.

சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பின் சுமார் 6 வருடங்கள், படங்களில் நடிக்காமல் இருந்த ஜோதிகா, கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ‘36 வயதினிலே’ படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார்.

தற்போது இவர் நடிப்பில் ‘உடன்பிறப்பே’ திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படம் வருகிற அக்டோபர் மாதம் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் தற்போது நடிகை ஜோதிகா முதன்முறையாக தனது இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கியுள்ளார். இதுவரை சமூக வலைதளங்களில் எந்த கணக்குகளும் இல்லாமல் இருந்த நடிகை ஜோதிகாவின் இந்த சோசியல் மீடியா வருகையை தமிழ் சினிமா ரசிகர்களும் பிரபலங்களும் வரவேற்றுள்ளனர்.

புதிதாக இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ள நடிகை ஜோதிகாவை இதுவரை 1.2 மில்லியன் இணையவாசிகள் பின்தொடர்ந்து வருகிறார்கள்.

https://www.instagram.com/p/CTOe4OTPwHi/