துரை

முதல்வர் ஸ்டாலின் ஜூலை 15 ஆம் தேதி அன்று மதுரையில் கலைஞர் நூலகத்தைத் திறந்து வைக்கிறார்.

ரூ.114 கோடி செலவில் மதுரை புதுநத்தம் சாலையில் ரூ.114 கோடியில் கலைஞர் நினைவு நூலகம் கட்டப்பட்டு வருகிறது.  இதில் கட்டிடத்திற்காக ரூ.99 கோடி, நூலகத்திற்கான புத்தகங்களை வாங்க ரூ.10 கோடி, தொழில்நுட்ப உபகரணங்களை வாங்க ரூ.5 கோடி என நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த கலைஞர் நூலகம் கீழ்த் தளம், தரை தளத்துடன் 6 தளங்களைக் கொண்ட கட்டிடமாக 2 லட்சத்து 13 ஆயிரத்து 288 சதுர அடி நிலப்பரப்பில் கட்டப்படுகிறது. முதல்வர் மு க ஸ்டாலின் இந்த நூலகத்திற்கான கட்டுமானப் பணிகளை 2022-ம் ஆண்டு ஜனவரி 11ஆம் தேதி தொடங்கி வைத்தார்.

கட்டுமானப் பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தன.  தற்போது அனைத்து தளங்களிலும் நவீன வசதிகளுடன் நூலகங்கள் கட்டப்பட்டு கீழ்த் தளத்தில் வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது.  மேலும் தரை தளத்தில் வரவேற்பு அரங்கம், தமிழர் பண்பாடு, அறிவியல் கண்டுபிடிப்புகள் அடங்கிய கலைக்கூடம், மாநாட்டுக் கூடம், மாற்றுத் திறனாளிகள் பிரிவு ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளன.

இங்கு மாற்றுத்திறனாளிகள் சிரமம் இன்றி அமர்ந்து படிக்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. தவிர 250 இருக்கை வசதிகள் கொண்ட கலையரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது.  இந்த கலைஞர் நினைவு நூலகத்தின் முன்பகுதியில் கருணாநிதியின் உருவச்சிலை அமைக்கப்படுகிறது.

கட்டிடத்தின் மேல் மாடியில் மாடித் தோட்டம், புத்தகங்களை வாசிக்கும் வசதி ஆகியவை அமைக்கப்படும். இந்த நூலகத்திற்காக 2½ லட்சம் புத்தகங்கள் ரூ.10 கோடி செலவில் வாங்கப்பட உள்ளன. மேலும் புத்தகங்களை வைக்கும் தளவாடங்கள் ரூ.16.70 கோடி செலவில் வாங்கப்பட உள்ளன.