ன்னார்

லங்கை மன்னார் நீதிமன்றம் 8 ராமேஸ்வர மீன்வர்களுக்கு ஜூலை 17 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

,ராமேஸ்வரத்திலிருந்து  கடந்த ஞாயிற்றுக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற ஜேசு என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் சென்ற எட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். இந்த 8 மீனவர்களும் சர்வதேச கடல் எல்லைப் பகுதியைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறப்படுகிறது

இலங்கை கடாற்படையிஅரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் இன்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களுக்கு வரும் ஜூலை 17, 2025 வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது.

அடுத்தகட்ட நடவடிக்கைகளாக மீனவர்கள் விடுதலை செய்யப்படுவதற்கான சட்ட மற்றும் இராஜதந்திர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசும், இந்திய அரசும் மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.