சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, இன்று வேட்புமனுத்தாக்கல் தொடங்கி உள்ள நிலையில்,  வில்லிவாக்கம் தொகுதியில் பத்திரிகையாளர் ‘விகடகவி’ எஸ். கந்தசாமி சுயேச்சையாக களமிறங்குகிறார் .

இதற்காக அவர் 18கிலோ எடையுடைய 5ரூபாய் காயன்களுடன் வேட்புமனுத்தாக்கல் செய்ய தயாராக உள்ளார்.

இதுதொடர்பாக  பத்திரிகையாளர் நா.பா.சேதுராமன் முகநூல் பதிவு

சென்னை வில்லிவாக்கம் தொகுதி ச. ம. உ. பதவியை குறிவைத்து ஐந்தாவது முறையாக களம் காணும் சுயேச்சை வேட்பாளர், நண்பர், பத்திரிகையாளர் ‘விகடகவி’ எஸ். கந்தசாமி (99401 50001).

அம்புட்டும் பழைய 5 ரூ. காய்ன், எண்ணிக்கையில் 2 ஆயிரம் காய்ன்கள், 18 கிலோ எடையை சுமந்து கொண்டு அயனாவரம் தேர்தல் அலுவலகத்தில் மனுதாக்கல் செய்யக் காத்திருக்கிறார்…

(மேயர் வேட்பாளராகவும் தளபதி ஸ்டாலினை

எதிர் கொண்டவர் நண்பர் எஸ். கந்தசாமி)

((மிஸ்டர் பூங்காவனம்  Poongavana Perumal RanuvaPettai Ravi   நீங்களும் உங்க கட்சி வேட்பாளர்களை அறிவிக்கலே…

எசமா ஏழுமலை வெங்கடேசன்  Ezhumalai Venkatesan   கட்சியிலும் தகவல் இல்லே…

எங்காளு சுயேச்சையா களம் இறங்கிட்டாரு…

தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் செய்யும் முதல் பத்திரிகையாளர் எஸ்.கந்தசாமிக்கு வாழ்த்தையாவது சொல்லி வைங்க ஓனர்ஸ்))