கோவை:

மிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில், ஜெயலலிதாவின் பணிப்பெண்கள்இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி நுழைந்த மர்ம நபர்கள் காவலாளி ஓம்பகதூரை கொன்றுவிட்டு சில பொருட்களைத் கொள்ளையடித்துச்சென்றனர்.

இந்த கொலை மற்றும் கொள்ளச் சம்பவம் தொடர்பாக 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கொலையில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் விபத்தில் உயிரிழந்தார்.

இந்த நிலையில், கொடநாடு பங்களாவில் ஜெயலலிதாவிற்கு உதவியாக இருந்த பணிப்பெண்கள் இருவரை காவல்துறையினர் இன்று கைது செய்தனர். அவர்களிடம் கொடநாடு எஸ்டேட்டில் உள்ள ஜெயலலிதாவுக்குச் சொந்தமான சொத்துக்கள் குறித்த விவரம் குறித்து  விசாரணை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.