டில்லி

த்திய அரசு தொடர்ந்து ஜாதிவாரி கணக்கெடுப்பைப் புறக்கணிப்பதாக ஜெயா பச்சன் தெரிவித்துள்ளார். 

முன்னாள் நடிகை ஜெயா பச்சன் சமாஜ்வாதி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்..  இவர் மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசினார்,

அப்போது ஜெயா பச்சன்,

“மத்திய அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் சு மவுனம் காக்கிறது. இதைத் தொடர்ந்து புறக்கணிப்பதன் மூலம், சமூகத்தின் ஏழை எளிய மக்களின் உரிமைகள் மற்றும் நலன்களை மத்திய அரசு மீறுகிறது. அரசின் திட்டங்களின் பலன்களை நீட்டிக்க எண்கள் மற்றும் புள்ளிவிவரங்கள் திருத்தப்பட வேண்டும் என்பதால் மக்கள்தொகை கணக்கெடுப்பு அவசியம்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் ஜாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.  பாஜகவின் மத்திய அரசு தனது நிறுவனங்களுக்கு 10.5 லட்சம் கோடி கடன்களைத் தள்ளுபடி செய்யுமே தவிர விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யாது, இது எனக்கு வருத்தமாக உள்ளது”

என்று கூறினார்.