முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்தநாளையொட்டி, சென்னை கத்திரப்பாரவில் அவரது உருவ படத்திற்கு ஆளுநர், பன்வாரிலால் மற்றும் முதல்வர் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் 129-வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும், குழந்தைகள் தினமாக, உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னை கத்திப்பாரா சந்திப்பில் உள்ள நேருவின் சிலையின் கீழ்  அவரது உருவ படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

இன்று காலை அங்கு வந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேரு படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து,  தமிழக  துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மற்றும்  அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜு, பெஞ்சமின், பாண்டியராஜன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பங்கேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள், தியாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.