இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்த பின், நடிகை கங்கனா ரணாவத் தொடர்ச்சியாக சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து, வீண் வம்பை விலைக்கு வாங்கி வருகிறார்.

இந்நிலையில் அண்மையில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், இந்தி சினிமா உலகில் பிரபல பாடலாசிரியாக விளங்கும் ஜாவேத் அக்தர் குறித்து சில கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.

இதனால் கோபம் அடைந்துள்ள அக்தர், மும்பையில் அந்தேரியில் உள்ள மெட்ரோபாலிடன் நீதிமன்றத்தில், கங்கனா மீது அவதூறு புகார் தெரிவித்துள்ளார்.

“சுஷாந்த் தற்கொலை விவகாரத்தில் தேவை இல்லாமல் தனது பெயரை கங்கனா தொடர்பு படுத்தி பேசி உள்ளார்” என அக்தர் குறிப்பிட்டுள்ளார்.

“இந்த கருத்து தனது புகழை களங்கப்படுத்தியுள்ளதால், கங்கனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என புகாரில் ஜாவேத் அக்தர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, இரு சமூகங்கள் இடையே விரோதத்தை தூண்டி விடும் வகையில் கருத்து தெரிவித்தது குறித்து விளக்கம் தருமாறு கங்கனாவுக்கு மும்பையில் உள்ள பந்த்ரா போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.

ஆனால், தான் இமச்சாலபிரதேசத்தில் இருப்பதால் ஆஜராக இயலவில்லை என கூறி இருந்தார்.

இதனால் கங்கனாவுக்கு பந்த்ரா போலீசார் இரண்டாம் முறையாக சம்மன் அனுப்பி, வரும் 10-ம் தேதி காவல்நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

– பா. பாரதி