மவுண்ட் ஃபுஜி மலையில் ஏறுவதற்கான அதிகாரபூர்வ மலையேறும் சீசன் முடிந்த நிலையில் அதன்மீது ஏறிய 27 வயது பல்கலைக்கழக மாணவர் நான்கு நாட்களில் இரண்டு முறை மீட்கப்பட்டார்.

ஜப்பானில் வசிக்கும் சீன மாணவர், கடந்த செவ்வாய்க்கிழமை அந்நாட்டின் ஃபுஜினோமியா மலைப் பாதையில் சென்றபோது கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,000 மீ (9,800 அடி) உயரத்தில் சிக்கித் தவித்த நிலையில் அவரை ஹெலிகாப்டர் மூலம் மீட்டனர்.

மலையேற பயன்படும் காலணியின் அடிப்பகுதியில் இணைக்கப்பட்ட கூர்முனை சாதனத்தை இழந்ததால் அவரால் மலைப்பாதையில் இறங்க முடியவில்லை.

இதையடுத்து ஹெலிகாப்டர் உதவியுடன் அவர் மீட்கப்பட்ட நிலையில் சனிக்கிழமையன்று, தனது தொலைபேசி உட்பட அவர் தவறவிட்ட பொருட்களை மீட்டெடுக்க அவர் மீண்டும் மலையேறினார்.

ஆனால் சிறிது தூரம் சென்ற அவர் உயரத்தை பார்த்து பயந்து உயர நோயால் பாதிக்கப்பட்டதை அடுத்து அவர் மீண்டும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் ஆபத்தில் இருந்து மீண்டுள்ளார்.

அந்த நபரை மீட்டதைத் தொடர்ந்து, ஷிசுவோகா மாகாணத்தில் உள்ள போலீசார், சீசன் இல்லாத நேரத்தில் மலை ஏறுவதைத் தவிர்க்க வேண்டும் என்ற தங்கள் ஆலோசனையை மீண்டும் வலியுறுத்தினர், ஏனெனில் வானிலை திடீரென மாறக்கூடும், இதனால் மீட்புப் பணியாளர்கள் பதிலளிப்பது கடினம். பாதைகளில் உள்ள மருத்துவ வசதிகளும் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.