ஜப்பானின் புஜிதா சுகாதார பல்கலைக்கழக விஞ்ஞானிகள், மனிதர்களுக்கு பாதிப்பில்லாததாகக் கருதப்படும் அளவுகளான, ஒரு மில்லியனுக்கு 0.05 முதல் 0.1 பங்குள்ள  (பிபிஎம்) செறிவைக் கொண்டிருக்கும் ஓசோன் வாயு –  தனித்துவ கொரோனா வைரஸைக் கொல்லக்கூடும் என்று கூறியுள்ளனர்.

ஆகஸ்ட் 26 அன்று ஜப்பானில் ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், ஓசோனின் குறைந்த செறிவு கொரோனா வைரஸின் துகள்களை செயலிழக்கச் செய்கிறது. பரிசோதனை அறைகள் மற்றும் காத்திருப்பு பகுதிகளைக்  கிருமிநாசினி செய்ய மருத்துவமனைகளுக்கு இது ஒரு சிறந்த வழியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. புஜிதா சுகாதார பல்கலைக்கழக விஞ்ஞானிகள், ஓசோன் வாயு ஒரு மில்லியனுக்கு 0.05 முதல் 0.1 பங்குகள் (பிபிஎம்) செறிவுகளில் வைரஸைக் கொல்லக்கூடும் என்பதை அவர்கள் நிரூபித்துள்ளனர். மேலும், இந்த செறிவுகள் மனிதர்களுக்கு பாதிப்பில்லாதவை என்று கருதப்படுகின்றன. ஓசோன் என்பது ஒரு வகை ஆக்ஸிஜன் மூலக்கூறு ஆகும், இது பல நோய்க்கிருமிகளை செயலிழக்கச் செய்கிறது.

COVID-19 ஐ ஏற்படுத்தும் SARS-CoV-2 என்ற வைரஸுடன் ஒரு சீல் செய்யப்பட்ட அறையில் ஓசோன் ஜெனரேட்டரைப் பயன்படுத்தினர். 10 மணி நேரம் குறைந்த அளவிலான ஓசோனுக்கு வைரஸை உட்படுத்தப்படும்போது வைரஸின் ஆற்றல் 90 சதவீதத்திற்கும் மேலாக குறைந்துவிட்டது என்று சோதனை காட்டியது. “தனித்துவ கொரோனா வைரஸ் பரவுதல் தொடர்ச்சியான, குறைந்த செறிவுள்ள ஓசோன் சிகிச்சையால் மக்கள் தற்போது இருக்கும் சூழலில் கூட, இந்த வகையான முறையைப் பயன்படுத்தி குறைக்கப்படலாம்,” என்று முன்னணி ஆராய்ச்சியாளர் தகாயுகி முராட்டா கூறினார். “மேலும், அதிக ஈரப்பதம் உள்ள நிலையில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நாங்கள் கண்டோம்,” என்றும் கூறினார்.

சமீபத்தில், ஜார்ஜியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் ஒரு ஆய்வு  ஓசோன் வாயு மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களை கிருமி நீக்கம் செய்வதில் பயனுள்ளதாக இருக்கும் என்று காட்டியது. உலகளாவிய COVID-19 எண்ணிக்கை 8.41 லட்சம் இறப்புகள் உட்பட 2.41 கோடியைத் தாண்டிய நேரத்தில் இந்த அறிவிப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.