ஜம்மு:

காஷ்மீரில் வன்முறை சம்பவத்தில் வாலிபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார் இதனால் அங்கு அசாதரமான சூழ்நிலை நிலவி வருகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள பாட்மாலு என்ற இடத்தில் துணை ராணுவத்தினருக்கும் போராட்டகாரர்களுக்கும் திடீரென மோதல் ஏற்பட்டது.

துணை ராணுவத்தினர் மீது போராட்டகாரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 19-வயது வாலிபர் சுட்டுக் கொல்லப்பட்டார். வாலிபரை சுட்டுக்கொன்றது துணை ராணுவத்தினர் தான் என புகார் எழுந்த.

இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் வன்முறை வெடித்துள்ளது. அந்த பகுதி முழுவதும் அசாதரமான சூழ்நிலை நிலவுவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.