மதுரை:
ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் இடம் பிடித்த விஜய்க்கு கார் பரிசு வழங்கப்பட்டது.

உலக புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.
இதில் 11 சுற்றுப்போட்டிகள் நடைபெற்ற நிலையில் 28 காளைகளை பிடித்து மாடுபிடி வீரர் விஜய் முதல் இடத்தை பிடித்தார். 17 காளைகளை பிடித்து கார்த்தி இரண்டமும் 13 காளைகளை பிடித்து பாலாஜி மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.
முதல் பரிசு வென்ற நபருக்கு முதலமைச்சர் சார்பில் கார் வழங்கப்படுகிறது. இரண்டாம் இடம் வென்ற நபருக்கு அமைச்சர் உதயநிதி சார்பில் டூவீலரும் வழங்கப்படுகிறது. மேலும் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கும் ஒரு டூவீலர் பரிசாக வழங்கப்படவுள்ளது.
முதலிடம் பெற்ற மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த விஜய், மின்வாரிய ஹேங்மேனாக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]