நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜெய் பீம்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இருளர் சமுதாயத்தைப் பற்றிய நிஜ சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சர்ச்சைக்கு மத்தியிலும் ஓ.டி.டி. தளத்தில் வெளியான இந்த திரைப்படம் பெரும் வெற்றியைப் பெற்றது.

தற்போது இந்த படத்தை ஆஸ்கர் விருது குழு நிர்வகித்து வரும் யூ-டியூப் சேனலில் வெளியிட்டிருக்கின்றனர்.

ஆஸ்கர் யூ-டியூப் சேனலில் வெளியாகும் முதல் இந்திய திரைப்படம் ‘ஜெய் பீம்’ என்பது குறிப்பிடத்தக்கது.