நெட்டிசன்:

மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு

சென்னை – பெங்களூர் சாலையில் உள்ள இந்த டோலில்நேற்று மாலை பத்து ரூபாய் நாணயங்களை தந்தோம். வாங்கவே முடியாது என்று மறுத்து விட்டார்கள்..

பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது, வாங்கமாட் டோம் என வெளிப்படையாக அறிவிப்பு வையுங்கள் என்று சொன்னோம்,

நீங்கள் கொண்டு போய் வங்கியில் கட்ட வேண்டியது தானே.. ஏன் எங்களிடம் கொண்டு வருகிறீர்கள் என்று நம்மையே திருப்பி கேட்டார்கள்..

ரைட்டு சைத்தான் சைக்கிள்ல ஏறியாச்சி என நினைத்துக்கொண்டு, எங்களிடம் வேறு பணமில்லை என்று வண்டியை ஆப் செய்துவிட்டோம்..

நேரம் நேரம் ஆக பின்னாடி இருந்தவர்கள் ஹார்ன் அடிக்க. அப்புறம் வேறுவழியில்லாமல் பத்து ரூபாய் நாணயங்களை வாங்கிக்கொண்டு, இரு வழிக்கு தரமுடியாது என்றும் ஒரு வழிக்கான சீட்டை மட்டுமே தரமுடியும் என்றும் தந்தார்கள்.

ஒரு மணிநேரத்தில் திரும்பும்போது அதே டோலில் மறுபடியும் பத்து ரூபாய் நாணயங்களை கொடுத் தோம், எதுவுமே சொல்லாமல் வாங்கிக்கொண்டார்கள்..

என்ன எழவோ, ஏதோ ஒருவகையில் டோல்கள் ஒவ்வொன்றும் மர்ம கூடாரங்களாக இருக்கின்றன..