உலக நாடுகள் பலவற்றில் தற்போது பொருளாதார மந்தநிலை நிலவி வருகிறது மற்ற நாடுகள் அதை எதிர்பார்க்கின்றன இந்த நிலையில் ஒவ்வொரு தொழிலும் ஒவ்வொரு பிராந்தியமும் பல்வேறு சவால்களை சந்தித்து வருவதாக மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெள்ளா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது இணையதளத்தில் எழுதியுள்ள சத்யா நாதெள்ளா, மைக்ரோசாப்ட் நிறுவனம் $1 பில்லியன் (ரூ. 8100 கோடி) மிச்சப்படுத்தும் முயற்சியாக அதன் 5 சதவீத பணியாளர்கள் சுமார் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 2023 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டு இறுதி வரை இந்த வேலை இழப்புகள் தொடரும் என்றும் இது ஒவ்வொருவருக்கும் சவாலான நேரம் என்றும் தனது பதிவின் மூலம் ஊழியர்களுக்கு தெரிவித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவின் முன்னேற்றங்கள் கணினி துறையில் ஒரு புதிய அலையை உருவாக்குகின்றன, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அடுத்த கவனம் இதுவாக இருக்கும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

ChatGPT, Dall-E போன்ற செயலிகளை உருவாக்கிய OpenAI நிறுவனத்தில் $10 பில்லியன் முதலீடு செய்ய மைக்ரோசாப்ட் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. உண்மையில், மைக்ரோசாப்ட் அதன் Azure வாடிக்கையாளர்களுக்கு Azure OpenAI சேவைகளின் ஒரு பகுதியாக ChatGPT ஐ வழங்கத் தயாராகி வருகிறது.

அடுத்ததாக நீண்டகால வாய்ப்புள்ள தொழில்நுட்ப நிறுவனங்களில் மைக்ரோசாப்ட் நிறுவனம் முதலீடு செய்ய வேண்டும், AI என்பது அத்தகைய ஒரு முக்கியமான தொழில்நுட்பம் என்று நாதெள்ளா கூறியுள்ளார்.

இந்த நீண்ட கால இலக்குகளை மனதில் வைத்து மைக்ரோசாப்ட் மூன்று முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளது என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

முதலாவது செலவினங்களைக் குறைப்பது, இதனால் சுமார் 10,000 பேர் வேலையிழக்க நேரிடும். இது “நிறுவனத்தின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் 5 சதவீதத்திற்கும் குறைவு.” இருப்பினும், இவர்களை முக்கிய பிரிவுகளில் பணியமர்த்த தேவையான முயற்சிகளை மைக்ரோசாப்ட் நிறுவனம் மேற்கொள்ளும் என்றும் நாதெல்லா கூறினார்.

இரண்டாவதாக, மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது வளர்ச்சி மற்றும் நீண்டகால தொழில் போட்டி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு எதிர்கால தொழில்நுட்பங்களில் தொடர்ந்து முதலீடு செய்யும். இதற்காக ஊழியர்களுக்கு வழங்கும் இழப்பீட்டுச் செலவுகள், ஹார்டுவேர் போர்ட்ஃபோலியோவில் மாற்றங்கள் மற்றும் குத்தகை ஒருங்கிணைப்புக்கான செலவுகள் ஆகியவற்றுக்குத் சுமார் 1.2 பில்லியன் டாலர் இந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் தேவைப்படும்.

மூன்றாவதாக, பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு பணிமாற்ற செயல்முறைக்கான பலன்கள் வழங்கப்படும். “அமெரிக்க-பயன்-தகுதியுள்ள ஊழியர்கள், சந்தைக்கு மேலான துண்டிப்பு ஊதியம், ஆறு மாதங்களுக்கு தொடர்ச்சியான சுகாதாரப் பாதுகாப்பு, ஆறு மாதங்களுக்கு பங்கு விருதுகளைத் தொடர்ந்து வழங்குதல், தொழில் மாற்றம் சேவைகள் மற்றும் 60 நாட்கள் அறிவிப்பு உட்பட பல்வேறு நன்மைகளைப் பெறுவார்கள். அத்தகைய அறிவிப்பு சட்டப்பூர்வமாக தேவையா என்பதைப் பொருட்படுத்தாமல், பணிநீக்கத்திற்கு முன். அமெரிக்காவிற்கு வெளியே உள்ளவர்களுக்கு, ஒவ்வொரு நாட்டிலும் உள்ள வேலைவாய்ப்புச் சட்டங்களின்படி பலன்கள் வழங்கப்படும் என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

“இந்த தருணத்தைப் பற்றி நான் நினைக்கும் போது, 2023 இன் தொடக்கம், இது எங்கள் தொழில்துறைக்கும் மைக்ரோசாப்ட்க்கும் ஒரு சவாலான நேரம். ஒரு நிறுவனமாக, நமது வெற்றி உலக வெற்றியுடன் இணைந்திருக்க வேண்டும். அதாவது, வாடிக்கையாளர்கள், சமூகங்கள் மற்றும் நாடுகள் உண்மையிலேயே பயனடையக்கூடிய அர்த்தமுள்ள கண்டுபிடிப்புகளை வழங்குவதற்கு நாம் ஒவ்வொருவரும் மற்றும் நிறுவனத்தில் உள்ள ஒவ்வொரு குழுவும் தனது பங்களிப்பை வழங்க வேண்டும் மற்றும் போட்டியை விட சிறப்பாக செயல்பட வேண்டும். இதைச் செய்வதால் எதிர்காலம் மிகவும் சிறப்பாக அமையும் என்பது உண்மை” என்று மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு பங்களித்த அனைத்து ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்து சத்யா நாதெள்ளா பதிவிட்டுள்ளார்.

11000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய மைக்ரோசாப்ட் திட்டம்…