டெல்லி: டிசம்பர் மாதம் திட்டமிடப்பட்ட இஸ்ரோவின் ஆளில்லா விண்வெளி திட்டம் கன்யான் தாமதமாகலாம்  என்று கூறப்படுகிறது.

2021 டிசம்பரில் ‘ககன்யான்’ கீழ் இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ மேற்கொள்ளவிருந்த 2 ஆளில்லா பயணங்களின் ஒரு பகுதியாக இது இருந்தது. முதல் ஆளில்லா பயணத்தின் தாமதம் சமீபத்தில் விண்வெளி ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட்டுவிட்டது.

கொரோனா வைரஸ் தொற்றால் விண்வெளி அமைப்பின் பணிகள் இடையூறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதால் பல பயணங்களில் தாமதம் ஏற்படும் என்று இஸ்ரோ முன்னரே கூறி இருந்தது.

பாதிக்கப்பட்டுள்ள முக்கிய திட்டங்களில் சந்திரயான் -3 மற்றும் ககன்யான் ஆகியவை அடங்கும். சந்திரயான் -3 இந்த ஆண்டின் பிற்பகுதியில் திட்டமிடப்பட்டது. மனித விண்வெளி பயணத்தை தொடங்குவதற்கான 2022 ஆம் ஆண்டின் காலக்கெடுவை ஒட்டிக்கொள்ள முயற்சிகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

டிசம்பர் 2020ம் ஆண்டு ஆளில்லா பயணத்தை தொடங்குவதற்கான காலக்கெடுவை எங்களால் சந்திக்க முடியாது. கொரோனா வைரஸ் தொற்று பல இடையூறுகளுக்கு வழிவகுத்தது. இது சமீபத்தில் விண்வெளி ஆணையத்திற்கும் தெரிவிக்கப்பட்டது இஸ்ரோ அதிகாரிகள் கூறி உள்ளனர்.

முன்னதாக கொரோனா தொற்றால் இஸ்ரோவில் இருந்த வெவ்வேறு மையங்களைச் சேர்ந்த ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்யாவசிய மற்றும் செயல்முறை தொடர்பான பணிகள் மட்டுமே நடந்து கொண்டிருக்கின்றன.