டில்லி

செவ்வாய் கிரகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தை ஆராய இந்திய அரசு விண்கலம் ஒன்றை அனுப்பி வைத்தது தெரிந்ததே.

அந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது.

அந்தப் புகைப்படங்களை கடந்த 24ஆம் தேதி அன்று இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ளது.

இந்த விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.