ஸ்ரீஹரிகோட்டா

ஸ்ரோ தலைவர் சிவன் ஜி எஸ் எல் வி எஃப் 10 ராக்கெட்டில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இலக்கை எட்டவில்லை என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

இஸ்ரோ என அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்  பூமி கண்காணிப்புக்காக 2 ஆயிரத்து 268 கிலோ எடை கொண்ட ஈ.ஓ.எஸ்.03 என்ற செயற்கைக்கோளை வடிவமைத்தது.  இதை‘ஜி.எஸ்.எல்.வி. எப்-10’ ராக்கெட்டில் பொருத்தி, இன்று (வியாழக்கிழமை) காலை ஆந்திராவின் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணுக்கு ஏவப்பட்டது.

இந்த ராக்கெட்டுக்கு உந்து சக்தியாக உள்ள எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்தது. தொடர்ந்து ராக்கெட்டுக்கான இறுதிக்கட்டப்பணியான 14 மணி நேர ‘கவுண்ட்டவுன்’ நேற்று பிற்பகல் 3.43 மணிக்கு தொடங்கியது.  இஸ்ரோ விஞ்ஞானிகள் ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள்களைத் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர். தொடர்ந்து ‘கவுண்ட் டவுனை’ முடித்துக் கொண்டு இன்று காலை ராக்கெட் விண்ணை நோக்கி சீறி பாய்ந்தது.

தற்போது இஸ்ரோ தலைவர் சிவன் ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-10’ ராக்கெட்டில் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும் கிரையோஜெனிக் எஞ்ஜின் பகுதியில் ஏற்பட்ட சிக்கலால் ராக்கெட் இலக்கை அடையாததால்  இந்த திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்த முடியவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.