திருவனந்தபுரம்:
டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பருக்கு ரூபாய் 2 கோடி பரிசு என கேரள அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது.

சமீபத்தில் முடிவடைந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணியில் கோல் கீப்பராக இருந்தவர் கேரளாவை சேர்ந்த ஸ்ரீஜேசு. இந்த நிலையில் இந்திய அணி ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற நிலையில் கோல் கீப்பராக இருந்த கேரளாவை சேர்ந்த ஸ்ரீஜேசு என்ற வீரருக்கு ரூபாய் 2 கோடி பரிசு தொகை என கேரள மாநில அரசு அறிவித்துள்ளது

மேலும் கோல்கீப்பர் ஸ்ரீஜேசுக்கு பரிசுகள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது ஏற்கனவே இந்திய இந்திய ஹாக்கி அணிக்கு ரூ.2 கோடி உள்பட பல்வேறு பரிசுகள் கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது