தெஹ்ரான்:

ரானில் அரசை விமர்சனம் செய்த செய்தியாளர் தூக்கில் போடப்பட்டார்.

ரொகல்லாட் ஸாம் என்பவர் அங்கு இணையதள பத்திரிகையை நடத்தி வந்தார். ஈரான் அரசுக்கு எதிராக மக்களை தூண்டி விட்டு போராட்டம் நடத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதற்காக கடந்த அக்டோபர் மாதம் ஸாம் கைது செய்யப்பட்டிருந்தார். தேசத்துரோகம் குற்றம் சாட்டப்பட்டிருந்த அவர் நேற்று தூக்கில் போடப்பட்டதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது. இந்த முடிவுக்கு பல்வேறு மனித உரிமை அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.