மும்பை:

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய 2வது ஆட்டம் மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் மைதானத்தில் நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன.

இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்எஸ் டோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது. 20 ஓவர் முடிவில் 153 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி பேட்டிங் செய்து வருகிறது.