சென்னை: நடப்பாண்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், சென்னையில் இன்று சிஎஸ்கே, ஆர்சிபி இடையே போட்டி நடைபெற உள்ளது. இதையடுத்து, இன்று மாலை சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மேலும், இரவு 11மணி வரை மெட்ரோ ரயில் போக்குவரத்தும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
2025ம் ஆண்டின் ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது. ஐபிஎல் 2025 தொடர் கடந்த 22ஆம் தேதி தொடங்கி பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இன்று ஐபிஎல் 8வது லீக் ஆட்டத்தில் சென்னை – பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம், சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 07:30 மணிக்கு தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஐபிஎல் போட்டியில் இதுவரை இந்த இரண்டு அணிகளும் 33 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 21 முறை சென்னையும், 11 முறை பெங்களூ ருவும் வெற்றி பெற்றுள்ளன. இதனிடையே இன்று நடைபெறும் போட்டியில் கோப்பையை வெல்ல போவது யார்? என்று ரசிகர்கள் உற்ச்சாகத்துடன் காத்திருக்கின்றன.
முன்னதாக கடந்த 23ம் தேதி சென்னை -மும்பை அணிகள் இடையே நடைபெற்ற போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது.
ஐபிஎல் போட்டிகளை காண டிக்கெட் எடுத்துள்ள ரசிகர்கள் ஐபிஎல் டிக்கெட்டை வைத்து ஸ்டேடியத்திற்கு செல்லவும், போட்டி முடிந்து அங்கிருந்து புறப்படுவதற்கும் மெட்ரோ ரெயில் மற்றும் மாநகர பேருந்துகளை இலவசமாக பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.