சென்னை: குறைந்த கட்டணத்தில் இணையதளத் தொலைக்காட்சி,  இணையதள சேவை, தமிழுக்கான செயற்கை நுண்ணறிவுக் கருவி உருவாக்கப்படும் என்பது உள்பட பல்வேறு அறிவிப்புகளை தமிழ்நாடு சட்டப் பேரவையில்  அமைச்சர் பிடிஆர் அறிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜூன் 20-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.  இந்த தொடரில்,  அமைச்சர்கள் துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தனது துறைக்கான திட்டங்களை அறிவித்தார். அதன் விவரம் வருமாறு:-

அறிவுசார் சொத்துரிமையின் தலைநகரமாகும் தமிழ்நாடு!

செயற்கை நுண்ணறிவுக்கான மொழித்தரவுகள் உருவாக்கம்!

குறைந்த கட்டணத்தில் இணை தொலைக்காட்சி

குறைந்த கட்டணத்தில் அதிவேக இணைய வசதி!

மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை பன்னாட்டுக் கணித்தமிழ் மாநாடு!

கணித்தமிழ் சார்ந்து தொடர் சொற்பொழிவுகள் தமிழ் இணையக் கல்விக்கழகத்தால் மாதந்தோறும் நடத்தப்படும்.

தமிழ் இணையக் கல்விக்கழகம் வழங்கும் கற்றல்-கற்பித்தல் பணிகள் விரிவாக்கம்!

தமிழ் இணையக் கல்விக்கழகம் வழங்கும் கற்றல்-கற்பித்தல் பணிகள் விரிவாக்கம்!

ஆழ்தொழில்நுட்பக் கொள்கை உருவாக்கம் (DeepTech Policy)

மின்ஆளுமை இயக்குநரகத்தில் தனித்தியங்கும் ஒழுங்குமுறை அமைப்பினை உருவாக்குதல்

தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கீழ் செயல்படும் நிறுவைனங்களை மறுசீரமைத்தல்

பெருங்குடியில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா/அலுவைக இடவசதி அமைத்தல்

புவிசார் கட்டமைப்பு உருவாக்கம்

ஆரம்ப சுகாதார நிலையங்கள் (PHCs), அரசுக் கல்லூரிகள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு அதிவேக இணைய அலைக்கற்றை வசதியை குறைந்த கட்டணத்தில் வழங்குதல்

குறைந்த கட்டணத்தில் இணையத்தள தொலைக்காtசி சேவை கள் (IP TV) வழங்குதல்

தமிழ்நாடு ஆழ்நிலை தொழில்நுட்பக் கொள்கை (Tamil Nadu Deep Tech Policy) உருவாக்கம்

தமிழ்நாடு அறிவுசார் சொத்துரிமைக் கண்டுபிடிப்புகளின் மாநாட்டினை ஆண்டுதோறும் நடத்துதல்

அரசு தொழில் பயிற்சி நிலையங்கள் (Government ITIs) மற்றும் அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகள் (Government Polytechnic Colleges) ஆகியவற்றுக்கு ICTACT நிறுவனம் வழங்கும் இலவச உறுப்பினர் சேவைகள்

ICTACT செயல்முறை ஆராய்ச்சி மையத்தை நிறுவுதல்

தமிழ்க் கற்ற – கற்பித்தல் செயல்பாடுகள் விரிவாக்கம்

கணித்தமிழ் தொடர் சொற்பொழிவு

மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை பன்னாட்டு கணித்தமிழ் மாநாடு நடத்துதல்

மின்னூலக அச்சுப் பக்கங்களை எழுத்துணரி (OCR) முறையில் உரைவடிவிற்கு மாற்றுதல்

உள்பட ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டார்.