டில்லி

ங்கிகளில் உள்ள வைப்புத் தொகை காப்பீட்டு ரூ.1 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஒரு வங்கி திவால் ஆனாலோ அல்லது வைப்புத் தொகை சேமிப்புகளை அளிக்க முடியாமல் நிதி நிலைமை கட்டுக்கு மீறினாலோ அதற்காக ரூ. 1 லட்சம் காப்பீடு (இன்ஷூரன்ஸ்) செய்யப்பட்டுள்ளது.  அதன்படி வங்கியில் எவ்வளவு வைப்புத் தொகை வைத்திருந்தாலும் ஒரு வாடிக்கையாளர்கள் மொத்தம் ரூ.1 லட்சம் மட்டுமே திரும்பப் பெறமுடியும்.   இதனால் வாடிக்கையாளர்கள் பணத்துக்கு ஒரு பாதுகாப்பு இல்லாத நிலை இருந்தது.

இந்நிலையில் மத்திய அரசு இந்த காப்பிட்டு தொகையை ரூ.5 லட்சமாக உயர்த்தி உள்ளது.  இந்த புதிய அறிவிப்பின்படி ரூ.5 லட்சம் வரை காப்பீடு பெற முடியும்.  முந்தைய திட்டத்தின்படி ரூ.1 லட்சம் காப்பீட்டை பெற 10 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும்.  அந்த தொகைக்கு வட்டி கிடைக்காது.  ஆனால் புதிய திட்டத்தின்படி ரூ.5 லட்சம் வரை காப்பீட்டை 90 நாட்களில் பெற முடியும்.

இந்த திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.  டில்லியில் நடந்த இந்நிகழ்வில் பிரதமர் மோடியுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரிச்ர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்தி தாஸ் உள்ளிட்டோர்  பங்கேற்றனர். இந்த நிகழ்வில் கலந்துக் கொண்ட பிரதம்ர் மோடி உரையாற்றி உள்ளார்.

மோடி தனது உரையில், “எனக்கு நன்கு நினைவிருக்கிறது.  முன்பு நான் குஜராத் முதல்வராக இருந்தபோது ஒரு வங்கி பல பிரச்சினைகளைச் சந்தித்தது. அப்போது மக்கள் சேமித்த பணத்தை எடுக்க முடியாமல் தவித்தார்கள். அந்நேரத்தில் மத்தியில் இருந்த ஆட்சியிடம், வங்கி வைப்புத்தொகை காப்பீட்டை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்துங்கள் எனவும் அப்போதுதான் பெரும்பாலான குடும்பங்களைத் திருப்திப்படுத்த முடியும் தெரிவித்தேன்..

இப்போது இந்த திட்டத்தில் பணத்தை இழந்த மக்கள் 90 நாட்களில் இழந்த தொகையை காப்பீடாகப் பெற முடியும் என்பது சிறப்பானது. இது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்களுக்கு ஏற்கெனவே பணமும் வழங்கப்பட்டுள்ளது. தேசத்தின் வளர்ச்சி, செழிப்புக்கு வங்கி முக்கியக் காரணம்.

முதலீட்டாளர்களை பாதுகாப்பது மூலம் நாம் வங்கிகளைக் காப்பாற்ற வேண்டும். இத்திட்டத்தின் மூலம் வங்கிகளையும், முதலீட்டாளர்களையும் பாதுகாத்துள்ளோம். இப்போது ஒவ்வொரு கிராமத்திலும் வங்கி வசதி கிடைத்திருக்கிறது. ஒவ்வொரு 5 கிலோ மீட்டருக்கும் வங்கி வசதி பெற்று ஏறக்குறைய. 8.5 லட்சம் வங்கிகள் செயல்பாட்டில் உள்ளன.

இப்போது வங்கிகள் வசதி படைத்தவர்களுக்குத்தான் என்ற சிந்தனை மாறியுள்ளது. தேசத்தின் வங்கி செயல்முறை ஜனநாயகமாக்கப்பட்டுள்ளது. இப்போது வங்கி வைப்புத்தொகையான ரூ.76 லட்சம் கோடியும் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.  நாட்டில் உள்ள 98 சதவீத சேமிப்புத் தொகையும் காப்பீடு வசதி பெற்று முழுமை அடைந்துள்ளது. வளர்ச்சி அடைந்த நாடுகளில் கூட இந்த வசதியில்லை.” எனத் தெரிவித்துள்ளார்.