ஹிசார்

அரியானா மாநிலம் ஹிசார் தொகுதியில் சுயேச்சையாக இந்தியாவின் மிகப் பெரிய பெண் செல்வந்தர் சாவித்ரி ஜிண்டால் போட்டியிட உள்ளார்.

இந்தியாவின் கோடீஸ்வர பெண்கள் பட்டியலில் ரூ.3.31 லட்சம் கோடியுடன் முதலிடத்தில் இருப்பவர் சாவித்ரி ஜிண்டால்.  சமீபத்தில் ஒ.பி.ஜிண்டால் குழும தலைவரான இவரது மகன் நவீன் ஜிண்டால் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்து மக்களவைத் தேர்தலில் ஹரியானா மாநிலம் குருஷேத்ரா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தேர்தலின்போது மகனுக்கு ஆதரவாக சாவித்ரி பிரச்சாரம் செய்தார்.

ஹரியானா சட்டப்பேரவைக்கு வரும் 5 ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் ஹிசார் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட சாவித்ரி ஜிண்டால் விருப்பம்  தெரிவித்திருந்தார். பாஜக அவருக்கு போட்டியிட வாய்ப்பு கொடுக்கவில்லை. எனவே சுயேச்சையாக களம் இறங்க சாவித்ரி ஜிண்டால் முடிவு செய்தார். நேற்று ஹிசார் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட சாவித்ரி ஜிண்டால் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

அரியானாவி மாநில அமைச்சரும்ம் ஹிசார் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ.வுமான கமல் குப்தாவை எதிர்த்து சாவித்ரி ஜிண்டால், ஹிசார் தொகுதியில் போட்டியிடுகிறார்.ஏற்கனவே சாவித்ரி ஜிண்டால், ஏற்கெனவே ஹிசார் தொகுதியில் இருந்து இரண்டு முறை காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்,