டாக்கா:
பங்களாதேச்ஷில்  உள்ள அனைத்து இந்திய விசா மையங்கள் அனைத்தும் காலவரையின்றி மூடப்படுவதாக பங்களாதேஷ்க்கான இந்திய ஹை கமிஷனர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பங்களாதேஷ் அரசு வெளியிட்டுள்ள ஊரடங்கு அறிவிப்பைத் தொடர்ந்து, பங்களாதேஷில்  உள்ள அனைத்து இந்திய விசா மையங்கள் அனைத்தும் காலவரையின்றி மூடப்படுகிறது. இன்று முதல் மூடப்படும் இந்த மையங்கள், மறு அறிவிப்பு வரும்  வரை மூடப்பட்டு இருக்கும். இருப்பினும், அவசரக் கால பயணத்திற்கான விண்ணப்பங்கள் ஊரடங்கின் போதும் பரிசீலனை செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அவசரக் கால பயணம் மேற்கொள்பவர்களுக்காக,
குறிப்பாக மருத்துவ ரீதியாகப் பயணம் மேற்கொள்பவர்கள் info@ivacbd.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ, 096123337, 096143337 ஆகிய தொலைப்பேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.