மும்பை
போர் பதற்றம் காரணமாக இந்திய பங்குச் சந்தை கடும் சரிவை சந்தித்துள்ளது.
நேற்று இந்திய பங்குச் சந்தை சர்வதேச சூழ்நிலை, இந்தியா–பாகிஸ்தான் போர் பதற்றம் உள்பட பல்வேறு காரணங்களால் கடும் சரிவை சந்தித்தது.
நேற்று 265 புள்ளிகள் சரிந்த நிப்டி 24 ஆயிரத்து 8 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.மேலும் 770 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 53 ஆயிரத்து 595 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
இதைப் ஓஒல் 478 புள்ளிகள் சரிந்த பின் நிப்டி 25 ஆயிரத்து 502 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 880 புள்ளிகள் வீழ்ச்சியடைந்த சென்செக்ஸ் 79 ஆயிரத்து 454 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அதே வேளீஈள் 38 புள்ளிகள் உயர்ந்த மிட்கேப் நிப்டி 12 ஆயிரத்து 21 புள்ளிகள் வர்த்தகத்தை நிறைவு செய்தது. ஆனால் 641 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 61 ஆயிரத்து 100 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
இவ்வாறு இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.