ல்;பாமா

ந்திய வம்சாவளி ஓட்டல் உரிமையாளர் அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்

அமெரிக்க நாட்டின் அலபாமா மாகாணத்தில் உள்ள ஷெப்பீல்ட் பகுதியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரவீன் ராவோஜிபாய் பட்டேல்  என்ற 76 யது நபர் ஓட்டல் ஒன்றை நடத்தி வந்தார். சுமார் 40 வருடங்களுக்கும் மேலாக ஷெப்பீல்ட் பகுதியில் இவர் வசித்து வந்துள்ளார்.

வில்லியம் ஜெரி மூர் என்ற 4 வயது நபர், தங்குவதற்கு ஒரு அறை தேடி பிரவீன் பட்டேலின் ஓட்டலுக்கு வந்துள்ளார். இருவருக்குமிடையே அப்போத வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. வில்லியம் ஜெரி, தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து பிரவீன் பட்டேல் மீது இரண்டு முறை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த பிரவீன் பட்டேல், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காவல்துறை விசாரணை நடத்தி குற்றவாளி வில்லியம் ஜெரியை கைது செய்தனர். அவர் கொலை செய்வதற்காக அவர் பயன்படுத்திய துப்பாக்கியையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள  ஆசிய அமெரிக்க ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் இந்தக் கொலை சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.