உக்ரைன்:
க்ரைனில் இருந்து இந்தியர்கள் வெளியேற உக்ரையன் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்தியர்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில் இந்தியா மற்றும் உக்ரைன் இடையே இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை மீதான தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது.

உக்ரைனின் தலைநகர் கீவில் உள்ள இந்திய தூதரகம் இன்று எல்லைகளில் அதிக அளவு பதட்டங்களுக்கு மத்தியில் தங்குவதற்கு அவசியமில்லாத அதன் நாட்டினரை தற்காலிகமாக நாட்டை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொண்டது.

“உக்ரைனில் தொடர்ந்து நிலவும் பதட்டங்கள் மற்றும் நிச்சயமற்ற நிலைகளை கருத்தில் கொண்டு, தங்குவது அத்தியாவசியமானதாக கருதப்படாத அனைத்து இந்திய பிரஜைகளும் மற்றும் அனைத்து இந்திய மாணவர்களும் உக்ரைனை விட்டு தற்காலிகமாக வெளியேற அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தூதரகம் தெரிவித்துள்ளது.

“இந்திய மாணவர்கள் பட்டய விமானங்கள் குறித்த புதுப்பிப்புகளுக்கு அந்தந்த மாணவர் ஒப்பந்ததாரர்களுடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள், மேலும் எந்தவொரு புதுப்பிப்புக்கும் தூதரக பேஸ்புக், இணையதளம் மற்றும் ட்விட்டரைப் பின்தொடரவும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பிப்ரவரி 15 அன்று ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் நடந்து வரும் பதட்டத்திற்கு மத்தியில் தற்காலிகமாக கியேவை விட்டு வெளியேறுமாறு அதன் குடிமக்களைக் கேட்டுக் கொண்டது. மேலும், இந்தியாவும் தனது குடிமக்களுக்குத் தேவையான இடங்களில் அவர்களைச் சென்றடைய உதவுவதற்காக, அவர்கள் இருக்கும் நிலையைப் பற்றித் தூதரகத்திற்குத் தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டது.

இதற்கிடையில், கிழக்கு ஐரோப்பிய நாட்டிலிருந்து இந்தியர்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில் இந்தியா மற்றும் உக்ரைன் இடையே இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை மீதான கட்டுப்பாட்டை சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் நீக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]