பிரிட்டனை இரு தினங்களுக்கு முன் தாக்கிய யூனிஸ் புயலின் போது லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் தரையிறங்க வந்த விமானம் ஒன்று காற்றின் வேகத்தில் தரையிறங்க முடியாமல் தள்ளாடியது.

புயல் காற்று எதிர்பாராத விதமாக மிகவும் பலமாக வீசியதால் விமானம் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது, சாதுர்யமாக செயல்பட்ட விமானி மீண்டும் வானில் பறந்து பின்னர் அந்த பயணிகள் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார்.

விமானம் தரையிறங்கும் காட்சிகள் அந்நாட்டு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நேரடியாக ஒளிபரப்பானது, இதைப் பார்த்தவர்கள் விமானத்தைப் பத்திரமாகத் தரையிறக்கிய விமானிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.