விவேக் மூர்த்தி

வாஷிங்டன்:

திபர் ஒபாமா ஆட்சி காலத்தில், தலைமை மருத்துவராக பதவியில் நியமிக்கப்பட்ட விவேக் மூர்த்தியை  டிரம்ப் நிர்வாகம் அதிரடியாக நீக்கி உள்ளது.

அமெரிக்க அரசின் சுகாதார துறையில் தலைமை சர்ஜன் மருத்துவராக பணியாற்றுபவர் விவேக் மூர்த்தி (39) இவரின் பூர்வீகம் இந்தியாவின் கர்நாடக மாநிலம் ஆகும்.

இவர்  2014ம் ஆண்டு ஒபாமாஆட்சியின்போது,  அமெரிக்காவின் 19-வது சர்ஜன் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். இந்த பதவியை ஏற்ற முதல் இந்திய வம்சாளி நபர் விவேக் ஆவார்.

இந்நிலையில், விவேக்கை அந்த பதவியிலிருந்து நீக்க டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அமெரிக்க சுகாதார துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அமெரிக்காவின் தலைமை சர்ஜனாகவும் சுகாதாரத்துறையின் தலைவராகவும் இருந்துவரும் விவேக் மூர்த்தி அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இது அங்குள்ள இந்திய வம்சாவழியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டிரம்ப் நிர்வாகத்தால் பதவி பறிக்கப்படும் 2வது இந்தியர் விவேக் மூர்த்தி.

ஏற்கனவே தலைமை அரசு வழக்கறிஞராக இருந்த பிரீத் பஹாரா என்னும் இந்தியரை டிரம்ப் அரசு பதிவி நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.