துபாய்:
துபாயை சேர்ந்த இந்திய தொழிலதிபர் அங்குள்ள காவல்துறை அதிகாரிக்கு 2,00,000 திர்ஹாம் லஞ்சம் கொடுத்ததால், துபாய் நீதிமன்றம் அவருக்கு இரண்டு வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

துபாயை சேர்ந்த 51 வயதான இந்திய தொழிலதிபர் கடந்த ஜூன் மாதம் தன்னை ஒரு கொள்ளை புகாரிலிருந்து காப்பாற்றிக்கொள்ள இரண்டு போலீஸ்காரர்களுக்கு லஞ்சமாக 2,00,000 திர்ஹாம் வழங்கியதாக கண்டறியப்பட்டது, இதை அறிந்த துபாய் நீதிமன்றம் அந்த தொழிலதிபருக்கு இரண்டு வருடம் சிறை தண்டனை அளித்து தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து அந்த இந்திய தொழிலதிபர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.