வாஷிங்டன்,

மெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகைக்கு இநிதியாவை சேர்ந்த பெண் தலைமை பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண், நியோமி ராவ் வாஷிங்டனின் வெள்ளை மாளிகையின் நிர்வாக தலைமை பொறுப்பில் அதிபர் டிரம்பால் நியமிக்கப்பட்டு  உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவில் உள்ள புகழ்எபெற்ற  சிகாகோ பல்கலைக்கழகத்திலும்உ யர் பட்டம் பெற்றுள்ள ராவ், தற்போது  வெர்ஜீனியா மாகாணத்தில் உள்ள ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்பட்டு வருகிற ஆன்டனின் ஸ்காலியா சட்டக்கல்லூரியில் பேராசிரியையாக  பணியாற்றி வருகிறார்.

இவரை அதிபரின்  வெள்ளை மாளிகையின் தலைமை நிர்வாகியாக டிரம்ப் தற்போது நியமித்துள்ளார்.

வெள்ளை மாளிகையின் நிர்வாகம் மற்றும் பட்ஜெட் தொடர்பான முடிவுகளை எடுக்கும் அதிகாரமும் நியோமி ராவிடம் இருப்பதால் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பதவியாக கருதப்படுகிறது.

இவர் இதற்கு முன்பாக ஜார்ஜ் புஷ் அரசில் இணை ஆலோசகராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றவுடன், இந்திய வம்சாவளியை சேர்த்ந உத்தம் தில்லான் என்பதை தலைமை வழக்கறிஞராக நியமனம் செய்தது குறிப்பிடத்தக்கது.