புதுடெல்லி:
30-வது அட்ரியாடிக் பெர்ல் குத்துச்சண்டை போட்டியில் இந்திய பெண்கள் அணி 5 தங்க பதக்கங்களை வென்று முதலிடத்தை பிடித்துள்ளது.

இந்த போட்டியின் 51 கிலோ பிரிவில் இந்தியாவின் பாபிரோஜிசானா சானு, 69 கிலோ பிரிவில் இந்தியாவின் அருந்ததி சவுத்ரி ஆகியோர் தங்க பதக்கம் வென்றுள்ளனர். இதுமட்டுமின்றி லக்கி ராணா வெள்ளி வென்றார்.

இந்திய பெண்கள் 10 பதக்கங்களுடன் (ஐந்து தங்கம், மூன்று வெள்ளி, மற்றும் இரண்டு வெண்கலம்) பதக்கப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில், உஸ்பெகிஸ்தான், செக் குடியரசு நாடுகள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளன.
Patrikai.com official YouTube Channel