மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை 9வது முறையாக வென்றார் செர்பியான் நோவக் ஜோகோவிக். இது இவரின் 18வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாக அமைந்தது.

இறுதிச் சுற்றில், ரஷ்யாவின் டேனில் மெத்வதேவை வென்று கோப்பையைக் கைப்பற்றினார் ஜோகோவிக். இவர் தற்போது உலகின் முதல்நிலை வீரர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோக்கோவிக்கை எதிர்த்து தரவரிசையில் 4வது இடத்தில் உள்ள ரஷ்ய வீரர் மெத்மதேவ் களம் கண்டார்.

இறுதியாட்டத்தில் முதல் செட்டே இருவருக்குமிடையே கடும் போராட்டமாக அமைந்தது. டைபிரேக்கரில் சென்ற முதல் செட்டை 7-5 என்ற கணக்கில் மெத்மதேவ் வென்றார். முதல் செட்டே இருவருக்கும் இடையே 45 நிமிடங்கள் நடந்தது.

ஆனால், சுதாரித்துக் கொண்ட செர்பிய வீரர் ஜோக்கோவிக் அடுத்த இரு செட்களையும் 2-6, 2-6 என்ற செட்களில் எளிதாக வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

இதன்மூலம் ஜோக்கோவிக் 9வது ஆஸ்திரேலியன் ஓபன் பட்டத்தையும், தொடர்ந்து 3வது முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்ற பெருமையைப் பெற்றார்.

இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை ரோஜர் பெடரரும், ரஃபேல் நடாலும் மட்டுமே பெற்றுள்ளனர். அந்த வரையில் 18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடன் ஜோக்கோவிச் 3வது இடத்தில் உள்ளார்.