மவுன்ட் மாங்கானு:
களிர் உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை 107 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அணி அபார வெற்றி பெற்றது.

நியூசிலாந்தில் நடைபெறும் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் இன்று, பிஸ்மாக் மரூப் தலைமையிலான பாகிஸ்தான் அணியுடன் மோதியது. நியூசிலாந்தின் மவுண்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணி களமிறங்கி விளையாடி 7 விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் குவித்தது.

245 ரங்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய பாகிஸ்தான் அணி 137 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியடைந்தது. இதையடுத்து இந்திய அணி 107 ரன்கள் வித்தியாத்தில் வெற்றி பெற்றது.

ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தானுடன் மோதிய 11 ஆட்டங்களிலும் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.