டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 31,222 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி  290 பேர் உயிரிழந்துள்ளனர்.  42,942 பேர் குணம்மடைந்து உள்ளனர்.

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 31,222 பேர் கொரோனாவாலி பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,30,58,843 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்பு காரணமாக, மேலும் 290 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 441042 ஆக உயர்ந்தது. உயிரிழந்தோர் விகிதம் 1.33% ஆக குறைந்துள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து நேற்று   ஒரே நாளில் 42942 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 32224937 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 97.44% ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 392864 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.23% ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 69,90,62,776 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.